முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துளளார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாமை இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருவதாகவும், ஜெயக்குமார் மீது வழக்கு தொடுத்தது சட்டரீதியான நடவடிக்கை தான். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அல்ல.அதிமுகவினர் யாரும் வருத்தம் அடையவில்லை என்றும், அவரால் பாதிக்கப்பட்டஅதிகமான அதிமுகவினர் தற்போது மகிழ்ச்சியோடு இருப்பதாக அவர் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சிவராத்திரி நிகழ்வு பற்றி செய்தியாளர் கேள்வி எழுப்பிய போது, சிவராத்திரி விழாவுக்காக நாங்கள் யாரையும் அழைத்து வற்புறுத்தி விழா எடுக்கவில்லை. மிகப்பெரிய அளவில் பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்கிற நோக்கில் தான் மயிலாப்பூரில் ஒரு திறந்தவெளி மைதானத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறிய அவர்,
தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் இரவு முழுவதும் சிவனை ஜோதி வடிவில் பார்க்க மக்கள் தங்கள் கோரிக்கையை வைத்து வருவது வழக்கம். அந்த வகையில் ஒரு சிறப்பான ஏற்பாடு மட்டுமே அல்லது ஏற்பாடு செய்துள்ளதாக அவர் கூறினார்மேலும், மாநகராட்சியின் மேயராக யார் வருவார் என தமிழ்நாடு முதலமைச்சர் முடிவு செய்வார் என்றும், அவர் அடையாளம் காட்டப்படும் நபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிவித்தார்.