முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

உதகை பைன் பாரஸ்ட் பகுதியில் நடமாடும் புலி – வனத்துறை எச்சரிக்கை!

உதகை பைன் பாரஸ்ட் சுற்றுலா மையத்தில் புலி ஒன்று முகாமிட்டிருப்பதால்,  அங்கு செல்லும் பயணிகள் கவனத்துடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும்.  இங்கு அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர்.  அந்த வகையில் உதகையில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று பைன் பாரஸ்ட்.  கேரளா, கர்நாடகா உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வருகை புரிந்து இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து செல்வது வழக்கம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் அண்மைக்காலமாக அப்பகுதியில் புலி ஒன்று முகாமிட்டுள்ளது.  குறிப்பாக பகல் நேரங்களில் சுற்றுலாப் பயணிகள் வாகன நிறுத்தும் இடங்களின் அருகே உலா வருவதும்,  அங்கேயே ஓய்வு எடுத்துச் செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளது. இதனை பார்த்த சுற்றுலாத்தள ஊழியர்கள் வனத்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வன சரகர் சசிகுமார் தலைமையில், வன ஊழியர்கள் புலியின்
நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் புலி அதே பகுதியில்
முகாமிட்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இயற்கை
காட்சிகளை கண்டு ரசித்து செல்லுமாறு வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

“இனி தமிழில் பேசப் போகிறேன்” – பிரதமர் நரேந்திர மோடி!

Web Editor

செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மனு!

Web Editor

“பூட்டு, சாவி, சுத்தியல்” அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்ன குட்டி ஸ்டோரி!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading