முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மிதவை உணவகம்: இனி ஏரியில் பயணித்தவாறே உணவருந்தலாம்!!

ஏரியில் படகில் பயணித்தவாறே உணவருந்த கூடிய வகையில் மிதவை உணவகம் அமைக்கப்படும் என சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார். 

ஏரியின் அழகை ரசித்தவாறே உணவருந்தக்கூடிய வகையில் தமிழ்நாட்டில் முதன் முறையாக மிதவை உணவகம் செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காட்டில் அமையவுள்ளது. அதுதொடர்பாக சுற்றுலாத்துறைச் செயலாளர் சந்தரமோகன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது பேசிய அவர், செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காட்டில் அமைய உள்ள மிதவை உணவகம் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். ஒரு படகு தயார் செய்யப்பட்டு அந்தப் படகில் உணவகம் ஏற்படுத்தப்படும். முட்டுக்காடு ஏரியில் பயணித்தவாறு அந்த உணவகத்தில் அமர்ந்து சுற்றுலா பயணிகள் உணவருந்தலாம்.இரண்டு அடுக்கிலான உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட உள்ளது. மூன்று மாதத்தில் படகு கட்டுமானம் முடிவடையும். ஏரியில் நீரின் ஆழம் குறைவாக இருந்தால் கூட அந்த படகு மிதக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. முட்டுக்காட்டில் மிதவை உணவகம் செயல்படுத்திய பின் பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில், மற்ற இடங்களிலும் இதை போன்ற மிதவை உணவகங்கள் விரிவுபடுத்தப்படும் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டிஎன்பிஎல் கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் நெல்லை ராயல் கிங்ஸ் வெற்றி!

Web Editor

“காங். பணமாக்குதல் திட்டத்தை அமலாக்க முயன்றது”- நிர்மலா சீதாராமன்

Halley Karthik

ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை முதல் 2 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம்!

Jayasheeba