மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு

தேங்காப்பட்டணம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடித்து திரும்பிய நான்கு பைபர் படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக கவிழ்ந்து விபத்தில் ஒருவர்  பலியாகி உள்ளார்.  கன்னியாகுமரி மாவட்ட மேற்கு கடற்கரை பகுதியான மிடலாம்…

தேங்காப்பட்டணம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடித்து திரும்பிய நான்கு பைபர் படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக கவிழ்ந்து விபத்தில் ஒருவர்  பலியாகி உள்ளார். 

கன்னியாகுமரி மாவட்ட மேற்கு கடற்கரை பகுதியான மிடலாம் முதல் நீரோடி வரை 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் பல்லாயிரகணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஒரு துறைமுகமாக தேங்கப்பட்டணம் மீன் பிடி துறைமுகம் இருந்து வருகிறது. இந்த துறைமுகத்தில் கட்டமைப்பு சரி இல்லாமால் உள்ளதால் துறைமுகம் அமைக்கப்பட்ட நாள் முதல் வரையிலும் 14-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் இந்த வாரம் மட்டும் ஐந்து விபத்துக்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று மீன் பிடித்து விட்டு கரை திரும்பிய நான்கு பைபர் படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக
கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், பூத்துறை கிராமத்தை சேர்ந்த சைமன் என்பவர் பலியாகி
உள்ளார்.

மேலும் இந்த விபத்தில் சிக்கிய மூன்று மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதில் மீனவர்கள் பயன்படுத்திய மீன்பிடி வலைகள் தண்ணிரில் மூழ்கியது. தேங்காபட்டணம் துறைமுகத்தில் இதுவரை 14 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இந்த பகுதியில் தொடர்ந்து ஏற்படும் விபத்தை தடுக்க துறைமுகத்தை மறு கட்டமைப்பு செய்ய மீனவர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.