பொன்னமராவதி அருகே ஆலங்குடி கிராமத்தில் உள்ள பெரிய கன்மாயில் மீன் பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மூலங்குடி கிராமத்தில் உள்ள பெரிய கண்மாயில் மீன் பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பொதுவாக பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலத்தில் நீர் வற்றும் விவசாய கண்மாய்களில் ஜாதி, மதம் என எந்த பாகுபாடுயின்றி அனைத்து மக்களும் கலந்து கொள்ளக்கூடிய மீன்பிடித் திருவிழா, நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும் ஊர் ஒற்றுமைக்காகவும் நடைபெறும்.
அதன்படி, இந்த ஆண்டும் பொன்னமராவதி பகுதிகளில் தினசரி மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி கிராமத்தில் உள்ள பெரிய கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் அப்பகுதியில் குவிந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர், ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை வீசி போட்டியை தொடங்கி வைத்த நிலையில், ஒரே நேரத்தில் கிராம மக்கள் போட்டி போட்டுக் கொண்டு கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறைப்படி ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு லாபகரமாக மீன்பிடிக்கத் தொடங்கினர். அதில் ஒவ்வொருவா் கைகளுக்கும் கிடைத்த நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்களை மகிழ்ச்சியுடன் மக்கள் வீட்டிற்கு அள்ளிச் சென்றனர்.