முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மெட்ரோ இரயிலில் பயணித்த நிதியமைச்சர் PTR; பயணிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்

தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் சென்னை விமான நிலையத்திலிருந்து மெட்ரோ இரயிலில் பயணித்தார். மெட்ரோ இரயிலில் தன்னுடன் பயணித்த சக பயணிகளுடன் உரையாடியதுடன், அவர்களிடம் குறைகளையும் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

2023 ம் ஆண்டின் முதல் சட்டப் பேரவைக் கூட்டம் கடந்த 9ம் தேதி முதல் நடந்து வருகிறது. இன்று ஆளுநருக்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அதனைத் தொடர்ந்து முன்வடிவம் பெற்ற சட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இன்றுடன் சட்டப் பேரவை அமர்வுகள் முடிவுக்கு வருகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தனது கருத்துக்களை துள்ளியமாகவும், வெளிப்படையாகவும் பேசக்கூடியவரான தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் வெளியூர் சென்றுவிட்டு விமானம் மூலம்  சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை வந்திறங்கினார்.

கடைசி நாளான இன்று சட்டமன்ற நிகழ்வுகளில் பங்கேற்க நேரமானதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையிலும், மெட்ரோ இரயிலில் பயணிக்க திட்டமிட்டார். சென்னை விமான நிலைய மெட்ரோவிலிருந்து  ஒமந்தூரார் தோட்டம் வரை மெட்ரோ இரயிலில் பயணித்த தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அங்கிருந்து அருகே உள்ள தலைமைச்செயலகம் வந்தடைந்தார்.

இந்த பயணத்தின் போது மெட்ரோ இரயிலில் தன்னுடன் பயணித்த பயணிகளுடன் உரையாடியதுடன், அவர்களிடம் குறைகளையும் கருத்துக்களையும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன்  கேட்டறிந்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram