2021-2022ம் ஆண்டு பெறப்பட்ட வரி வருவாயோடு ஒப்பிடும்போது அதற்கடுத்த 6 மாதங்களில் 36.92 சதவீதம் மாநிலத்தின் வரி வருவாய் உயர்ந்துள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை நான்காம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடியது. அப்போது வரவு-செலவு திட்டம் தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது ஆய்வறிக்கையினை தாக்கல் செய்து பேசினார். அப்போது பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான முதல் ஆறு மாதங்களில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.72,441 கோடியாகும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது 2022-2023ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் 50.73 சதவீதமாகும். இது முந்தைய ஆண்டின் அதாவது 2021-2022 ஆம் ஆண்டு அதே காலக்கட்டத்தில் பெறப்பட்ட வருவாயோடு ஒப்பிடும்போது 36.92 சதவீதம் உயர்ந்துள்ளது.மாநில முக்கிய வரியினங்களில் 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை பெறப்பட்ட வருவாய், கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில் பெறப்பட்ட வருவாயுடன் ஒப்பிடுகையில் 36.92% வளர்ச்சி காணப்படுகிறது. மீதமுள்ள நிதியாண்டிலும் இந்த போக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2022-2023ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்குகளை அடைவதற்கு, வரிவசூலினை மேம்படுத்துதல், வரி ஏய்ப்புகளைத் தடுத்தல் போன்ற முயற்சிகளை அரசு மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.