2022-23 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வருகின்ற 22ம் தேதி புதுச்சேரி சட்ட பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்வார் என சட்டபேரவை தலைவர் செல்வம் தெரிவித்தார்.
புதுச்சேரி 15 வது சட்டப்பேரவையின் 3 வது கூட்டத்தொடரின் கூட்டம் கடந்த 10ம் தேதி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்திராஜன் உரையுடன் கூடியது. தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்காததால் பேரவை அன்றைய தினமே காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது, இந்நிலையில் மத்திய அரசானது 10, 696 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்ய அனுமதி அளித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை அடுத்து 15வது சட்டப்பேரவையின் 3 வது கூட்டத்தொடரின் 2வது பகுதியாக, ஆகஸ்ட் 22 ம் தேதி காலை 09.30 மணியளவில் கூடுகின்றது என்றும் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி 2022-23 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வார் எனவும் புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும் அன்றைய தினமே ஆய்வு குழு கூட்டம் கூடி சட்டப்பேரவை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.