இடி, மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு!

பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று இடி மின்னலுடன்  பெய்த மழையில் சரவணன் என்ற விவசாயி இடிமின்னல் தாக்கி உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வார காலமாக 100…

பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று இடி மின்னலுடன்  பெய்த மழையில் சரவணன் என்ற விவசாயி இடிமின்னல் தாக்கி உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு வார காலமாக 100 டிகிரியை தொட்ட வெயில் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வந்திருந்த நிலையில் இன்று பிற்பகல் திடீரென கருமேகம் சூழ்ந்து இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இதில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள பெரும்பேடு கிராமத்தில் விவசாய நிலத்தில் சரவணன், செங்கழுநீர்மேடு பகுதியில் இருந்து திருவிழாவுக்காக சரவணன் வீட்டுக்கு வந்திருந்த அவருடைய உறவினர் வேம்புலி, ஆதிலட்சுமி ஆகிய மூன்று பேர் விவசாய பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கருமேகம் சூழ்ந்து இடி மின்னல் தாக்கியதில் சரவணன், வேம்புலி, ஆதிலட்சுமி ஆகியோர் சுருண்டு
விழுந்துள்ளனர்.

அருகில் இருந்தவர்கள் அவர்களை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு முதலுதவிக்காக அழைத்து வந்த நிலையில் சரவணனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். மேலும் வேம்புலி, ஆதிலட்சுமி ஆகி இருவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தகவல் அறிந்து வந்த பொன்னேரி காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.