சிறுமியின் தலையை வெட்டி கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை

சேலத்தில் சிறுமியின் தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் தளவாய்ப்பட்டியை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு பக்கத்து வீட்டில்…

சேலத்தில் சிறுமியின் தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம் தளவாய்ப்பட்டியை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு பக்கத்து வீட்டில் வசித்த ராஜலட்சுமி என்ற சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததுடன், தாயின் கண்முன்னே சிறுமியின் தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தினேஷ்குமார் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து நீதிமன்ற வளாகத்தில் தினேஷ்குமார் இன்று காலை ரகளையில் ஈடுபட்டார்.

சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை வழங்கிய நீதிபதி முருகானந்தம், குற்றம்சாட்டப்பட்ட தினேஷ்குமாருக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.

அண்மைச் செய்தி: திருவாரூரில் உணவுப்பூங்கா; அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிறுமியின் பெற்றோர், தினேஷ்குமாருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தனர். நியாயம் கிடைத்துள்ளதாக தெரிவித்த சிறுமியின் பெற்றோர், தூக்கு தண்டனை விதித்த நீதிபதி முருகானந்தத்திற்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.