தமிழகம் முழுவதும் நாளை வெளியாக உள்ள “பத்து தல” படத்தை அனைவரும் திரையரங்கிற்கு வந்து பார்க்க வேண்டும் என நடிகர் சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார் .
மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு தற்போது நடித்து வெளியாக உள்ள திரைப்படம்தான் ‘பத்து தல’ திரைப்படம். கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ‘மஃப்ட்டி’ படத்தின் ரீமேக்காக ‘பத்து தல’ படம் உருவாகி இருக்கிறது. இதனாலயே இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பத்து தல படத்தின் படப்பிடிப்பானது ஆந்திர மாநிலத்தில் ஐத்ராபாத், விசாகப்பட்டினம், , கர்நாடக மாநிலத்தில் பெல்லாரி, துங்கபத்திரை அணை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கோவிலூர், கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் நடந்தது.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிந்து, தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பத்து தல படத்தின் டீஸர், பாடல்கள் , டிரெய்லர் ஆகியவை வெளியான நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், இயக்குனர் கிருஷ்ணா, இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் என திரைப்பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதையடுத்து , பத்து தல படம் மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், படம் ரிலீஸ்க்கு முன்பாக போட்டு காண்பிக்கப்படும் ‘பத்து தல’ படத்தின் சிறப்பு காட்சியினை நேற்று படக்குழுவினருடன் சேர்ந்து நடிகர் சிம்பு கண்டு ரசித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, படம் குறித்த தனது கருத்துக்களை ரசிகர்களிடம் பகிர்ந்துகொண்டுள்ள நடிகர் சிம்புவின் வீடியோவை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் சிம்பு பத்து தல படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்றால், அதற்கு காரணம் நீங்கள் எனக்கு கொடுத்திருக்கும் ஆதரவு தான். அதை என்றும் நான் மறக்க மாட்டேன். உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. படம் சிறப்பாக வந்துள்ளது. அனைவரும் திரையரங்கு வந்து படத்தை பார்க்க வேண்டும். கண்டிப்பாக இந்த படம் பெரிய வெற்றி பெற இறைவனை வேண்டி கொள்கிறேன். நீங்கள் இல்லாமால் நான் இல்லை என்று கூறியுள்ளார்.
#PathuThala #STR 's loving message to all Tamil people.#PathuThalaFromTomorrow#Atman @SilambarasanTR_ @Gautham_Karthik @StudioGreen2 @PenMovies @arrahman @nameis_krishna @priya_Bshankar @NehaGnanavel @Dhananjayang @MangoMassMedia @homescreenent @SonyMusicSouth pic.twitter.com/NOBsT1wDpi
— Studio Green (@StudioGreen2) March 29, 2023
- பி.ஜேம்ஸ் லிசா