முக்கியச் செய்திகள் தமிழகம்

பெண் யானை உயிரிழப்பு!

அந்தியூர் வனப்பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை, உடல்நலக்குறைவால் உயிரிழந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனசரகத்திற்கு உட்பட்ட அத்தாணி வனப்பகுதியில் வழக்கம்போல வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது, பெண் யானை ஒன்று இறந்து கிடைப்பதை கண்டனர். இதுகுறித்து மாவட்ட வன அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். அவரது உத்தரவுப்படி, கால்நடை மருத்துவரை கொண்டு யானையின் சடலம் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில், இறந்த பெண் யானையின் வயது 20 என்றும், உடல்நலக்குறைவால் இறந்திருப்பதும் தெரிய வந்தது. யானைகள் உயிரிழப்பதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இறந்துகிடந்த தாய் கழுதை; கண்ணீர் விட்டு அழுத குட்டி

Web Editor

4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் த்ரில் வெற்றி!

G SaravanaKumar

முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமனம்

G SaravanaKumar