வேலைக்கு சென்றவர்களை தாக்கிய யானை; பெண் உட்பட இருவர் பலி!

ஆந்திர மாநிலம் மல்லனூர் கிராமம் அருகே யானை தாக்கியதில், இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே மல்லனூர் என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த தேவேந்திரா…

ஆந்திர மாநிலம் மல்லனூர் கிராமம் அருகே யானை தாக்கியதில், இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே மல்லனூர் என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த தேவேந்திரா என்பவரின் மனைவி உஷா மற்றும் மேலும் 4 பேர் பெங்களூருக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். இன்று காலை மல்லனூர் கிராமத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த யானை ஒன்று அவர்களை விரட்டி சென்றது.

அப்போது உஷா கீழே விழுந்து விட்ட நிலையில் அவரை யானை மிதித்ததாக கூறப்படுகிறது. இதில் உஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணமடைந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் உஷா உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக குப்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

உஷா மரணமடைந்த சற்று நேரத்தில் அதே பகுதியில் உள்ள சப்பனிகுண்டா கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பவரும் யானை தாக்கி பரிதாபமாக மரணமடைந்தது தெரியவந்தது. ஒரே பகுதியை சேர்ந்த இரண்டு பேரையும் யானை தாக்கி ஒரே நாளில் மரணம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.