நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை குறித்து மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியோடு . அமைதியாக நடந்து முடிந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உத்தேசமாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இதில், குறிப்பிட்ட வார்டுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சென்னை, மதுரை உள்பட ஐந்து வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது. எனவே, வாக்கு எண்ணிக்கைக்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை மேற்கொள்கிறது. காலை 11 மணிக்கு காணொலி மூலம் நடைபெறும் ஆலோசனையில், வார்டு வாரியாக முடிவுகளை வெளியிடுதல் மற்றும் கூடுதல் பாதுகாப்பு வழங்குதல் குறித்த முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது.