31.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

100 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு பார்வையிருந்தால் கல்வியை கொடுக்க முடியும்- அன்புமணி ராமதாஸ்!

நூறாண்டுகள் தொலைநோக்கு பார்வையுடன் இருந்தால் நீங்கள் கல்வியை கொடுக்க வேண்டும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.  

காஞ்சிபுரம் மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள ஆதி பொறியியல் கல்லூரியின் 10ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. 2017-2021 ஆண்டுகளில் பொறியியல் படித்த 360 மாணவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி ராமதாஸ், இந்த கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 90% கிராமப்பகுதியில் இருந்து படிக்கும் மாணவர்கள். அந்த காரணத்தினால் தான் நான் இந்த கல்லூரிக்கு வருகை தந்திருக்கிறேன். இங்கு பட்டம் பெற இருக்கும் மாணவ, மாணவிகள் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் வாழ்கையில் மிக முக்கியாமான நாள் இது. உங்களுக்கும், உங்கள் பெற்றோர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான நாள்.

இதையும் படிக்கவும் : வேங்கை வயல் விவகாரம்; உண்மை கண்டறியும் சோதனை நடத்த போலீசார் திட்டம்?

ஆனால் ஒரு வருத்தம் இருக்கும் உங்கள் நண்பர்களை பிரிந்து செல்லக்கூடிய நாள். இதை நானும் கடந்து தான் வந்துள்ளேன். வாழ்க்கையிலே மிக மகிழ்ச்சியான பருவம் கல்லூரி பருவம் தான். கடவுளிடம் வந்து ஒரு வரம் கேட்டால், என்னுடைய கல்லூரி நாட்களை திருப்பிக் கொடுங்கள் என்று கேட்பேன். அந்த அளவிற்கு கல்லூரிகளில் மகிழ்ச்சியாக இருந்தேன்.இந்த கல்லூரியில் பல ஏழை மாணவர்கள் படித்து வருகிறார்கள். கட்டண மிகவும் குறைவானது என்று கூறினார்கள். கால நிலை மாற்றம் – நிறைய பேருக்கு இது என்னவென்று தெரியவில்லை. அது எனக்கு வருத்தம். வாட் இஸ் க்ளைமேட் சேஞ்ச் என்று சொன்னால் யாருக்கும் புரியவில்லை. ஐஸ் கரைந்து வருவதால், மாலத்தீவு எனும் நாடு இன்னும் இருபது, முப்பது ஆண்டுகளில் இருக்காது என்று கூறுகிறார்கள்.

நமது முதல்வர் சொல்லியிருந்தார் 1 லட்சம் மரக்கன்றுகள் நட வேண்டும் என்று அது ஒரு நல்ல திட்டம். நல்ல செய்தி. உலகத்தில் உங்கள் அனைவருக்கும் நல்ல வாய்ப்புகள் இருக்கு. அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு காலத்தில் 12 லட்சம் பேர் அரசு வேலையில் இருந்தார்கள். தற்போது 5 லட்சம் பேர் தான் வேலையில் உள்ளார்கள். இங்கிருக்கும் ஒவ்வொருவரும் சுந்தர் பிச்சையாக வர வேண்டும்.

35 வயதில் நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் நான் முதல் முதலில் பேசும்போது எனக்கு வார்த்தைகள் வரவில்லை. பின்னர் யாரும் குட்கா, சிகரெட் போன்றவை பயன்படுத்த கூடாது என்று நான் ரோட்டில் இறங்கி போராடினேன். அதற்கு பிறகு தான் பொது இடங்களில் சிகரெட் பயன்படுத்தக் கூடாது என்று சட்டம் கொண்டு வந்தேன். 108 ஆம்புலன்ஸ் சேவையை கொண்டு வந்தேன்.

ஒரு ஆண் படித்தால் அவன் மட்டும் படித்த மாதிரி. அதுவே ஒரு பெண் படித்தால் அந்த குடும்பமே படித்த மாதிரி. தமிழ் சமுதாயத்திற்கு கடைசியான ஒரு செய்தி சொல்கிறேன். ஒரு ஆண்டு தொலைநோக்கு பார்வை இருந்தால் நீங்கள் நெல் பயிரிடலாம். பத்து ஆண்டுகள் தொலைநோக்கு பார்வைகள் இருந்தால் மரங்கள் நடலாம். நூறாண்டுகள் தொலைநோக்கு பார்வையுடன் இருந்தால் நீங்கள் கல்வியை கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading