டெல்லி இன்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கம் அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் இன்று மாலை 7.57 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கமானது 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில் இந்நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தலைநகர் டெல்லியிலும் இரவு 8 மணியளவில் உணரப்பட்டுள்ளது. டெல்லி, நொய்டா, குருகிராம், பரிதாபாத்தில் உள்ளிட்ட பகுதிகளில் 54 நொடிகள் நிலநடுக்கம் உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வீடுகளில் உறங்கி கொண்டிருந்த மக்கள் பலரின் மீது கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்தனர். மேலம் பல மக்கள் காயமடைந்ததோடு, பலத்த பொருட்சேதமும் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது டெல்லி மற்றும் உத்தரகாண்டில் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.








