இ-சேவை 2.0 திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், இதன் மூலம்
விரைவாகவும் எளிமையாகவும் சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள செங்கல்வராயன் மாளிகையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் தகவல் தொழில் நுட்பவியல் துறையின்சார்பில் அதிகாரிகளுக்கு இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது,
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சைபர் செக்யூரிட்டி மிகவும் முக்கியமானது. தரவுகளை பாதுகாப்பதும் முக்கிய
அம்சமாக மாறி உள்ளது. சைபர் செக்யூரிட்டி ஆர்க்கிடெக்சர் என்ற கடமைப்பை உருவாக்கி தரவுகளை பாதுக்காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில், 3000 அரசு ஊழர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழக அரசின் இணையதளத்தை முடக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதை வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. எதிர்காலத்தில் இதுபோன்ற இணையதள முடக்கங்கள் நடைபெறாமல் இருக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், கடந்த பத்தாண்டுகளாக இ-சேவை மையங்களில் மக்களுக்குத் தேவையான போதிய சேவைகள் இடம்பெறாமல் இருந்தன. திமுக ஆட்சிக்கு வந்தபின் புதிய சேவைகள்
இணைக்கப்பட்டுள்ளன. இ- சேவையில் விரைவில் 2.0 அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன்
மூலம் விரைவாகவும் எளிமையாகவும் சேவைகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருகின்றன.
தனியார் இ சேவை மையம் மையங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுப்பதற்காக இ
பேமண்ட் வசதி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார் மேலும் இந்த நிகழ்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மை செயலாளர் நீரஜ் மித்தல் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.