பாரம்பரிய கலைகளை கற்று கொள்வதற்காக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் விரைவில் வகுப்புகள் நடத்தப்படும் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
நிமிர்வு கலையகம் மற்றும் பேரூராதின கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் உலகப்பொது இசை பறை மாநாடு கோவை பேரூர் தமிழ் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. பறை இசையை இசைத்து மாநாட்டை அமைச்சர் சுவாமிநாதன் துவக்கி வைத்தார். இந்த உலகப்பொது இசை பறை மாநாட்டில் 100 க்கும் மேற்பட்ட இசைக்கருவிகளின் கண்காட்சி, நாட்டார் கலை நிகழ்ச்சிகள், கலையக விருது, கருத்தரங்கு, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அதிலும் சிறப்பம்சமாக 1330 பறை கலைஞர்கள் ஒன்றுகூடி ஒரே நேரத்தில் பறை இசைக்கும் திருக்குறள் பறை படை நிகழ்ச்சி மாலை நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சாமிநாதன்,
தமிழினத்தின் அடையாளமாக பறை இசை கருவி உள்ளது. இதுபோன்ற பாரம்பரிய கலைகளை கற்று கொள்வதற்காக, அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் விரைவில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படும். நமது வரலாறுகளை தெரிந்து கொள்வதற்கான பல்வேறு முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக கூறினார். மேலும், பாரம்பரிய கலைகளை கற்று கொள்வதற்காக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் விரைவில் வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா








