கூடுதல் விலைக்கு மது விற்ற 60 ஊழியர்களுக்கு அபராதம்!

ஓமலுார் உட்பட பல்வேறு பகுதிகளில் கூடுதல் விலைக்கு மது விற்ற 60 ஊழியர்களுக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், ஓமலுார், காடையம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டாரத்தில் 20-க்கும் மேற்பட்ட டாஸ்மாக்…

ஓமலுார் உட்பட பல்வேறு பகுதிகளில் கூடுதல் விலைக்கு மது விற்ற 60 ஊழியர்களுக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம், ஓமலுார், காடையம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டாரத்தில் 20-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன.  சேலம் முழுவதும் 218 டாஸ்மாக் கடைகள் உள்ளன.  மேலும் ஓமலுார், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டாரத்திலுள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டது.  எனவே டாஸ்மாக் அதிகாரிகள் வேலுார் மாவட்டம் முழுவதும் ஆய்வு நடத்தினார்கள்.

இதில் பல்வேறு கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்றது தெரியவந்தது.  கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் ஒரு பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது.  விற்பனை செய்த 60 ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கபட்டது.

மொத்தமாக சுமார் ஒரு லட்ச ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டது.  அதே போல் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ, சந்து கடைகளுக்கு மதுபானங்கள் விற்பனை செய்ய அனுமதித்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.