முக்கியச் செய்திகள்உலகம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ட்ரம்ப் எழுதிய கடிதம்: நெட்டிசன்கள் விமர்சனம்!

அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு முன்னாள் அதிபர் ட்ரம்ப் கடிதம் எழுதியுள்ளார்.

அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுள்ளார். இதனையடுத்து ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார். அமெரிக்காவில் பதவி முடிந்து செல்லும் அதிபர்கள் அடுத்து வரும் அதிபர்களுக்கு கடிதம் எழுதி வைத்து செல்லும் வழக்கம் இருக்கிறது. குறிப்பாக தங்கள் பதவியில் கிடைத்த அனுபவம் பற்றியும், இனி வரப் போகும் நபர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து கடிதம் எழுதுவார்கள். அந்தவகையில் ட்ரம்ப்பும், ஜோ பைடனுக்கு கடிதத்தை எழுதி வைத்து விட்டு சென்றுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனை ஜோ பைடனும் உறுதி செய்துள்ளார். ஆனால் அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. தேர்தலில் ஜோ பைடனின் வெற்றி உறுதியான பிறகும், ட்ரம்ப் அதனை ஏற்க மறுத்துவிட்டார். இருவருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்தது. இந்நிலையில் ஜோ பைடனுக்கு ட்ரம்ப் கடிதம் எழுதியுள்ளது வியப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அவர் என்ன எழுதியிருப்பார் என்பது குறித்தும் விதவிதமான கமெண்டுகளை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ’நான் தான் வெற்றி பெற்றேன் என்பது உங்களுக்கே தெரியும் பைடன்’ என அவர் எழுதியிருப்பார் என்று கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் – 8:30 மணி வரை முன்னிலை நிலவரம்.!

Web Editor

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் நம்பகமானது – காங். குற்றச்சாட்டை நிராகரித்தது தேர்தல் ஆணையம்!

Web Editor

எனக்கு கொடுக்கும் பணத்தை கஷ்டப்படும் அறக்கட்டளைக்கு கொடுங்கள் -வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் விடுத்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!

Jeni

Leave a Reply

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading