முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக ரூ.250 கோடி செலவு செய்துள்ளது – கே.சி.பழனிசாமி குற்றச்சாட்டு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் குறைந்தபட்சம் 250 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக கே.சி.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரவியை சந்தித்து பேசிய பிறகு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே சி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 250 கோடி ரூபாயை திமுக செலவு செய்துள்ளது. அதனை எதிர்த்து கேட்க வேண்டிய எடப்பாடி பழனிசாமியும் கேட்கவில்லை. தேர்தல் ஆணையமும் மத்திய அரசாங்கமும் ஏன் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது. வருமான வரித்துறை கூட எந்த விதமான ஆய்வையும் நடத்தவில்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பணப்பட்டுவாடாவை தற்போது தடுக்கவில்லை என்றால் அடுத்து வரக்கூடிய நாடாளுமன்ற சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும். பணம் வைத்திருப்போர் மட்டுமே தேர்தலில் போட்டியிடும் சூழல் உருவாகும்.

அண்மைச் செய்தி: ”குளறுபடி ஏற்பட்டாலும் குரூப்-2 தேர்வு முறையாக நடைபெற்றது” – தேர்வர்கள் கருத்து

திமுக அமைச்சர்கள் ஒவ்வொருவரின் மீது இருக்கும் ஊழல் பட்டியலை விரைவில் ஆளுநரை சந்தித்து வழங்க இருக்கிறேன். உண்மையான அதிமுக தொண்டர்கள் அனைவரும் எம்ஜிஆர் பக்கம்தான் இருக்கிறார்கள். இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram