ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று கனிராவுத்தர்குளம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்து 21 மாதங்கள் ஆகிறது. இந்த 21 மாதங்களில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ஒரு திட்டம் கூட செயல்படுத்தப்படவில்லை. முக்கியமாக 28 கிலோமீட்டர் தூரத்திலிருந்து காவிரி நீரை கொண்டுவரும் திட்டம் அதிமுக ஆட்சியில்தான் செயல்படுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டிக்கொடுக்கப்பட்டது. கனிராவுத்தர் குளத்தினை பராமரிக்க 6 கோடி ரூபாய் அதிமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்டது. இதுதான் அதிமுக ஆட்சியின் சாதனை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஸ்டாலின் உத்தரவின் பேரில் 25 அமைச்சர்கள் ஈரோடு பகுதியில் முகாமிட்டு வீதிவீதியாக சென்று காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு வாக்கு கேட்கிறார்கள். இந்த தொகுதிக்கு அந்த அமைச்சர்கள் எதுவும் செய்யவில்லை. கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கையை மட்டும் சொல்லிவிட்டு எதையும் நிறைவேற்றாமல் இருக்கிறார். 520 அறிவிப்புகள் அறிவித்து எதையுமே அவர் நிறைவேற்றவில்லை. இதில் 85 சதவீதம் நிறைவேற்றிவிட்டோம் என்று ஸ்டாலின் முழு பூசணியை சோற்றில் மறைக்கிறார்.
அண்மைச் செய்தி: உலகின் மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் இருந்து வெளியேறிய டெல்லி
பொங்கல் தொகுப்பில் கூட ஊழல். கொடுக்கப்பட்ட வெள்ளத்தினை கூட மக்கள் பயன்படுத்த முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் விலைவாசி உயர்ந்துள்ளது. இதனை தடுக்க திமுக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.