திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 01-12-2022 வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கத்தில்” நடைபெறும். அதில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இனமானப் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா என்ற பொருளில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் வாக்குச்சாவடி உறுப்பினர்கள், மகளிர், இளைஞரணி வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பது குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் அறிவுறுத்தல்கள் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்தி திணிப்பு எதிர்ப்பு, மத்திய பாஜக அரசுக்கு எதிராக முன்வைத்து வரும் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பரப்புரை மேற்கொள்ள மாவட்ட செயலாளர்களுக்கு திமுக தலைமை அறிவுறுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.