மனநலம் பாதிக்கப்பட்டு காணாமல்போன செவிலியருக்கு தென்காசி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பூரண சிகிச்சையளித்து குடும்பத்தினருடன் அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த செவிலியர் ரூபி என்பவர் திருவனந்தபுரத்திற்கு நேர்முகத் தேர்வுக்காக வந்தபோது அவரது சான்றிதழ், உடைமைகளை தொலைந்து போனதால் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், தென்காசி பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்துள்ளார்.
பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் மாவட்ட காவல்துறையினர் உதவியுடன் வடகரையில் உள்ள அன்பு மனநல காப்பகத்தில் அவர் சேர்க்கப்பட்டார். பின்னர் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நோயின் தாக்கம் முழுமையாக குணமடைந்த நிலையில், அவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ரூபி அளித்த விலாசம், தொலைபேசி எண்ணை தொடர்பு டெல்லியில் இருந்து அவரது உறவினர்களை நேரில் வரவழைத்து அவர்களிடம் ரூபியை ஒப்படைத்தனர். உறவினர்களை கண்ட ஆனந்தத்தில் ரூபி கண்ணீர் மல்க மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார்.







