கேழ்வரகு, கம்பு, போன்றவை நேரடியாக கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர், கம்பு, கேழ்வரகு, வரகு, சோளம், திணை, சாமை போன்ற சிறு தானியங்கள் ஊட்டச்சத்து நிறைந்தவை என்பதால் அவற்றை மீண்டும் தமிழ்நாட்டில் செழிக்கச் செய்யும் பொருட்டு நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் புதியதாக சிறுதானிய மண்டலங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்கவும்: அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க நம்மாழ்வார் விருது- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அறிவித்துள்ள நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் செயல்படுத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுதானிய உற்பத்தி, நுகர்வு ஆகியவற்றை அதிகரிக்கும் வகையில் கேழ்வரகு, கம்பு, போன்றவற்றை நேரடியாக கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் கிடைப்பது உறுதி செய்யப்படும் எனவும் அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் சிறுதானிய திருவிழாக்கள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்தார்.