தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அறநிலைய துறை சார்பில் தண்ணீர் பந்தல் மற்றும் ஓய்வு எடுக்கும் அறை அமைத்து தர வேண்டும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனூரை வடிவுடையம்மன் கோவிலுக்கு அருகாமையில் வடக்கு நோக்கி காட்சி கொடுக்கும் குரு பகவான் உள்ளார். அவர் வேறு எங்கும் இதுபோன்று வடக்கு நோக்கி அமர்ந்து காட்சி கொடுப்பதில்லை. வடகுரு ஸ்தலம் என்று அழைக்கப்படும் இத்திருக்கோவிலில் குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு இரவு எட்டு முப்பது மணி முதல் விசேஷ ஹோமங்கள் நடைபெற்றது. இதில் சிவாச்சாரியார்கள் பங்கேற்று வேதபராயணம் முழங்க கலசங்களை தலையில் ஏந்தி மேளதாளங்களுடன் கோவில் உட்ரகாரங்களில் ஒய்யாளி நடனமாடி வலம் வந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், குரு பெயர்ச்சியை ஒட்டி சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், காலை முதலே வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், பொது மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என கூறினார். மேலும் குளிர்பானங்கள் தான் குடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று கூறிய தமிழிசை, அதிக அளவில் நீரை பருகி தற்காத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். தேவையில்லாமல் வெயிலில் செல்வதனால், HEAT STROKE வருவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.
மேலும், தமிழ்நாட்டில் வழக்கத்தை விட, வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், கோவில்களுக்கு வரும் பக்கதர்களுக்கு அறநிலைய துறை சார்பில் தண்ணீர் பந்தல் மற்றும் ஓய்வு எடுக்கும் அறை போன்றவை அமைத்து தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
- பி.ஜேம்ஸ் லிசா