மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து மாநிலத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 8.5 மடங்குக்கும் மேலாக அதிகரித்து, 2026-27 ஆம் ஆண்டில் 7,611 கோடியாக உயர்ந்துள்ளது.
ஒத்துழைப்பு இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை எனக் கூறியுள்ள அஸ்வினி வைஷ்ணவ் தற்போதைய ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான 4,326 ஹெக்டேர் நிலத்தில் 1,052 ஹெக்டேர், அதாவது 24% மட்டுமே தமிழக அரசால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்துவதற்காக தமிழக அரசுக்கு ஏற்கனவே 1,465 கோடி வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசிடம் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிலுவையில் உள்ளதால், பல முக்கிய திட்டங்கள் தாமதமாகி வருகின்றன என அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ராமேஸ்வரம் – தனுஷ்கோடி புதிய ரயில் பாதை திட்டத்திற்கான அடிக்கல் 2019-ம் ஆண்டு பிரதமரால் நாட்டப்பட்டது.
ஆனால், தமிழ்நாட்டின் ஒத்துழைப்பின்மை காரணமாக, இந்தத் திட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.







