32.5 C
Chennai
April 25, 2024
தமிழகம் செய்திகள்

வீடுகட்டுவதற்கான நிதியில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை – தமிழ்நாடு அரசு

பிரதமரின் வீடுகட்டும் திட்டற்கான நிதியில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் இறந்தவர் பெயரில் வீடு கட்ட நிதி ஒதுக்கீடு செய்து முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த உதயகுமார் தாக்கல் செய்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் குற்றவியல் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கை நீதிபதிகள் தீர்ப்பிற்காக ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading