36.1 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

மார்ச் 12-க்கு பிறகு விசாரணைக்கு ஆஜராக தயார் – டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!

மார்ச் 12 ஆம் தேதிக்கு பிறகு காணொளி வாயிலாக விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறைக்கு பதில் அனுப்பியுள்ளார்.  

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது.  இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும்,  100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் எழுந்த புகார் மீதான விசாரணையில் கலால் துறை அமைச்சராக இருந்த மனீஷ் சிசோடியா,  ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக  குற்றச்சாட்டு எழுந்தது.  இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறை அவருக்கு 7 முறை சம்மன் அனுப்பியது.  ஆனால் அவர், 7 முறையும் ஆஜராகாமல் புறக்கணித்தார்.   இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை அவருக்கு 8 முறையாக சம்மன் அனுப்பியது.

இந்த நிலையில்,  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறைக்கு கடிதம் மூலம் பதில் அனுப்பியுள்ளார்.  அதில், அமலாக்கத்துறையின் சம்மன் சட்டவிரோதமானது என்றாலும்,  அதற்கு பதிலளிக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.  மார்ச் 12 ஆம் தேதிக்கு பிறகு விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதாகவும்,  தேதியை தெரிவித்தால் காணொளி வாயிலாக விசாரணைக்கு ஆஜராவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading