கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவு

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 8 சதவீதம்  குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 21 லட்சத்து…

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 8 சதவீதம்  குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 21 லட்சத்து 87 ஆயிரத்தி 205 பேர் சிகிச்சை பெற்று வருவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில், மூன்று லட்சத்து 06 ஆயிரத்து 064 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி, ஒரே நாளில், 439 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 89 ஆயிரத்து 409 ஆக
அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 495 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மத்திய
சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றால் 8 ஆயிரத்து 209 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.