திருவண்ணாமலை அருகே சாராய விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட கைதி உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காவல் மரணங்களில், கடைகோடி மனிதர்களுக்கும் அவர்களது மனித உரிமை காக்கப்பட்டு, உரிய நீதி கிடைத்திட இந்த அரசும், திமுகவும் என்றைக்கும் துணை நிற்கும் என, சென்னையில் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தின்போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் விளக்கம் அளித்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவரது உரையின் தாக்கம் குறைவதற்குள்ளாகவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறைக்காவலில், கைதியின் மரணம் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம், இளையங்கண்ணியை அடுத்த தட்டாரனை கிராமத்தில் பழங்குடி மலக்குறவன் இனத்தைச் சேர்ந்தவர் தங்கமணி. இவரை கடந்த 21-ம் தேதி காவல் ஆய்வாளர் நிர்மலா, காவலர் பழனி ஆகியோர் விசாரணைக்காக கலால் காவல் ிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
அவர் மீது சாராயம் விற்பனை செய்ததாக கூறி சிறையில் அடைத்துள்ளனர் காவல்துறையினர். தங்கமணிக்கு 27ஆம் தேதி உடல்நிலை சரியில்லாததால், அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கமணி இறந்த செய்தி அவரது குடும்பத்தாருக்கு தெரியவர, அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மர்ம மரணம் தொடர்பாக நீதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பணம் கேட்டு மிரட்டி தனது தந்தையை கொன்று விட்டதாக தங்கமணியின் மகன் பரபரப்பு புகாரை தெரிவித்திருக்கிறார்.
அண்மைச் செய்தி: தமிழ்நாட்டில் நடைபெறும் குரூப் 4 தேர்வுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
காவல்துறையினர் அப்பகுதி மக்களிடம் லஞ்சம் கேட்டு அடிக்கடி தொல்லை கொடுப்பது புதிதல்ல என்பதான் அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் அதிர்ச்சி தகவல். இதேபோல் சில ஆண்டுகளுக்காக மர்மமான முறையில் ஒருவர் இறந்த சம்பவம் அரங்கேறியுள்ளைதை குறிப்பிட்டு சொல்கிறார் இளையங்கண்ணி கிராம பஞ்சாயத்து தலைவர் கார்த்தி.
தங்கமணிக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு இரண்டு முறை காவல்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டது குறித்து தங்கமணியின் உறவினர்களுக்கு காவல்துறையினர் தகவல் தெரிவிக்காமல் இருந்தது அவர்களுக்கு சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.
தங்கமணியின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சிரை சந்தித்தனர். இந்த மரணத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் மர்ம மரணம் குறித்து நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. தங்கமணியின் உடல், உடற்கூராய்வு செய்த நிலையில், உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
சின்ன விசாரணைதான், விசாரித்துவிட்டு அனுப்பி விடுகிறோம் என்று காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்ட நபர் இறந்து விட்டதாக வந்த செய்தி, தங்கமணியை குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.