முக்கியச் செய்திகள் கொரோனா

அதிகரிக்கும் கொரோனா; இன்று மட்டும் 15,379 பேர் பாதிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக 15,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து இருந்தது. இந்நிலையில் திடீரென தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், 15,379 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட 1,389 அதிகமாகும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28,29,655 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுப் பாதிப்பில் இருந்து இன்று 3,043 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 27,17,686 பேர் குணமடைந்துள்ளனர்.

தொற்றுப் பாதிக்கப்பட்டவர்களில் 75,083 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இந்த எண்ணிக்கை 62,676 ஆக இருந்தது. உயிரிழப்பை பொறுத்த அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆக பதிவாகியுள்ளது. இதனால் மொத்த உயிரிழப்பு 36,886 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டங்களை பொறுத்தவரை நேற்று சென்னையில் 6,190 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 6,484 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல கோயம்புத்தூரில் 863 பேருக்கும் செங்கல்பட்டில் 1,665 பேருக்கும் தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒமிக்ரான் தொற்றை பொறுத்த அளவில், 179 பேர் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 179 பேரும் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

செஸ் வீராங்கனை ஹரிகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது

Web Editor

அதிமுகவில் இருந்து நிலோபர் கபில் நீக்கப்பட்டது ஏன்?

Halley Karthik

கன்னியாகுமரியில் அதிமுக -திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு!

EZHILARASAN D