கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் பூஷன் இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இந்தியாவில் வரும் மாதங்களில் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள், யாத்திரைகள் நடைபெற உள்ளது. அங்கு கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாநில அரசுகள் வரக்கூடிய நாட்களில் பரிசோதனை, கண்காணிப்பு, தடுப்பூசி மற்றும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், திருவிழா மற்றும் பாதயாத்திரைகள் நடைபெறும் பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதோடு, ஆர்.டி.பி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.தடுப்பூசி செலுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும், பொதுக்கூட்டங்கள் மற்றும் வழிபாட்டு கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் காற்றோட்ட வசதி உள்ள இடங்களாக இருக்க வேண்டும் என்றும், மருத்துவ வசதி, மருந்துகள் இருப்பு, ஆக்சிஜன் இருப்பு உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.