கோவையில் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி குடும்பம் நடத்திய காதலன் மீது காதலி ஆசிட் வீசிய சம்பவத்தில் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கேரளாவை சேர்ந்த ராக்கேஷ் என்பவர் துபாயில் மசாஜ் சென்டர் நடத்தி வந்த போது, அங்கு பணிபுரிந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த ஜெயந்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் சொந்த ஊருக்கு வந்த நிலையில், ராக்கேசுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் முடிந்துள்ளது. இதனால் ஜெயந்திக்கும், ராக்கேசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்துவதற்காக இருவரும் கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் சந்தித்துள்ளனர்.
அப்போது, தகராறு முற்றிய நிலையில் ஜெயந்தி மறைத்து வைத்திருந்த ஆசிட்டை ராக்கேஷ் மீது வீசியுள்ளார். மேலும் தானும் உயிரிழப்பு க்கு முயன்றுள்ளார். பின்னர் தகவலறிந்து சென்ற போலீசார், இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.








