சென்னை ஆழ்வார்பேட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கு, கொரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் கொரோனா 2வது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்த தனியாக ஒரு பிரிவு தோற்றுவிக்க, தமிழக அரசு கடந்த வாரம் உத்தரவிட்டது.

இந்நிலையில் சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதில் முதற்கட்டமாக 25 மாற்றுத் திறனாளிகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.







