தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை கடைபிடிக்க வேண்டிய சூழல் நிலவுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனையைத் தொடர்ந்து, திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்பட 13 கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய அவர், கொரோனா தொற்று பரவல் காரணமாக மருத்துவ துறையே பெரும் மன நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதாக தெரிவித்தார். ஊரடங்கு காலத்தை சிலர் விடுமுறை காலத்தை போல நினைத்து ஊர் சுற்றி வருவதாகவும், இதனால், தொற்று பரவல் அதிகரித்து வருவகிறது. கொரோனா பரவலை தடுக்க வரும் நாட்டிகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அமல்ப்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது.







