திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்ட இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் குடும்பத்தார் 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த அருண்குமார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாபு என்பவரின் மனைவி ஜோதிக்கும் தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2018 ஜூன் மாதம் ஜோதியின் வீட்டிற்கு வந்த அருண்குமார் மீது 5 பேர் மிளகாய் பொடியை தூவி, இரும்பு கம்பியால் தாக்கியும் கொலை செய்துள்ளனர்.
இது தொடர்பாக அருண்குமாரின் தாய் சௌபாக்கியம்மாள் அளித்த புகாரில் ஜோதி மற்றும் அவரது கணவர் பாபு, ராஜேஷ், ஜோசுவா, வெங்கட சுப்பையா ஆகிய 5 பேர் மீது வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வழக்கில் கைதானவர்கள் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் போதிய சாட்சிகள் மற்றும் ஆதாரங்களுடன் காவல் துறையால் நிரூபிக்கப்பட்டதால்
பாபு, ராஜேஷ், ஜோசுவா, வெங்கட சுப்பையா ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள்
கடுங்காவல் சிறை தண்டனையும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து
நீதிபதி தீர்ப்பளித்தார்.
தீர்ப்பு அளிக்கும்போது ஜோதி ஆஜராகாததால் அவர் மீதான வழக்கு பிரிக்கப்படுகிறது என்றும், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் காவல் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
ம. ஶ்ரீ மரகதம்