“திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் லஞ்சம் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
அதிமுக காலத்தில் கொண்டுவரப்பட்ட கர்பிணிகளுக்கான அம்மா nutrition கிட் ,
வெறுமனவே nutrition கிட் என இப்போது அழைக்கப்படுகிறது. அதில் இடம்பெற்றுள்ள
Pro pl health mix எனும் தனியார் நிறுவன பொருளுக்கு பதிலாக ஆவின் நிறுவன
health mix பயன்படுத்தலாம் என துறை அதிகாரிகள் , திட்டக் குழுவினர் மார்ச்
மாதம் பரிந்துரை செய்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கர்ப்பிணிகளுக்காக 2 ஆண்டுகளுக்கு 23லட்சத்து 88 ஆயிரம் கிட்களை தமிழக அரசு
வாங்குகிறது. இதில் அனிதா டிக்ஸ் காட் மூலம் கர்ப்பிணிகளுக்கு 8 பொருட்கள்
வழங்கப்படுகிறது. அனிதா டிக்ஸ் காட் நிறுவனத்திற்கு ரூ.450 கோடிக்கு ஒப்பந்தம்
வழங்கப்பட்டுள்ளது. உயிருக்கே அச்சம் தரும் பொங்கல் தொகுப்பை வழங்கியது இந்த
நிறுவனம்தான்.
ஆவினுக்கு வழங்காமல் pro pl health mix க்கு மீண்டும் கொடுத்ததால் தமிழக
அரசுக்கு ரூ.45 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கர்ப்பிணிகளுக்கான கிட்டில் 2 பொருட்களை தனியார் நிறுவனத்தில் வாங்கியதில் தமிழக அரசுக்கு மொத்தம் 77 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. G square முன்னேற்றக் கழகமாக சென்னை cmda மாறி உள்ளது. நிலத்தை பதிவு செய்வதற்கு குறைந்தபட்சம் 200 நாள் ஆகும் , ஆனால் g square கோவையில் 122
ஏக்கர்களுக்கான லே அவுட் 8 நாளிலே பெற்றுள்ளனர்.
திமுகவிற்கு , முன்னர் 2g முடிவுரை எழுதியது போல , தற்போது g square என்ன
செய்யப் போகிறது என காத்திருந்து பார்க்க வேண்டும். 20 ம் தேதிக்கு மேல் திமுகவின் ஊழல் , சட்ட மீறல் செயல்பாடுகள் குறித்து புத்தகமாக ஆளுநரிடம் வழங்க உள்ளோம்.
தமிழகத்தில் இருந்து தேர்வாகும் ஐஏஎஸ் , ஐபிஎஸ் அதிகாரிகள் குறைந்து வருகின்றனர். 42 பேர்தான் தேர்வாகியுள்ளனர் என்பதை ஏற்க முடியாது.
அதிமுகவுடன் சச்சரவு இல்லை
அதிமுகவை அழித்துதான் பாஜக வளர வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது. பல முக்கிய மசோதா நிறைவேற அதிமுக எங்களுக்கு துணையாக இருந்தது.
அதிமுக குறித்து எங்களது கட்சியினர் தலைமையின் உத்தரவு இல்லாமல் எந்த கருத்தையும் பேசக்கூடாது என கூறியுள்ளோம். அதிமுகவுடன் எங்களுக்கு சண்டை சச்சரவு கிடையாது. எங்களது கட்சி குறித்து அதிமுகவினர் சிலர் தவறான கருத்தை கூறினாலும் ஓபிஎஸ் , இபிஎஸ் அதை ஏற்க மாட்டார்கள்.
சீமானுக்கு அவரது கட்சியை முதலிடம் கொண்டுவர ஆசை இருப்பதுபோல , பாஜகவை முதலிடம் கொண்டுவர எனக்கும் ஆசை இருக்கிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் சீமான் எங்களது பக்கம் சாய்ந்து தனது கோரிக்கையை நிறைவேற்ற முயற்சித்தால் கூட சரியான முடிவாகவே இருக்கும். இலங்கை மக்களுக்கு நல்லது செய்ய மோடியால் மட்டும்தான் முடியும் என்பது சீமானுக்கும் தெரியும் என்றார் அண்ணாமலை.
-மணிகண்டன்