தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் நகரமாக கோவை உள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் 2 ஆம் அலை மக்களை அச்சுறுத்திவருகிறது. நாளுக்குநாள் கொரோனாவின் தொற்று அதிகரிப்படுவதோடு இந்நோயால் உயிரிழப்போரின் எணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கோவை மாநகரில் கொரோனா தொற்று மிக அதிகமாக பரவி வருகிறது நாளொன்றுக்கு 2,000 முதல் 3,000 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிப்படைகின்றனர். கோவையில் தினமும் இறப்போரின் எண்ணிக்கை இரண்டு இலக்கு எண்களில் உள்ளது.
இந்த சூழ்நிலையால் கோவை அரசு மருத்துவமனை பிணவறையில் உடல்களை வைக்க இடம் இல்லாமல் அருகில் இதற்கென்று தனி இடம் ஒன்றை அமைத்து அங்கு உடல்கள் வைக்கப்படுகிறது.
தினமும் கொரோனவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையால் இந்த தற்காலிக பிணவறையில் உடல்கள் குவிந்து உள்ளது. இந்த காட்சி மருத்துமனைக்கு வருவோரின் நெஞ்சை உலுக்கும் காட்சியாக உள்ளது.
மேலும் அங்கு பிணங்களை அடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் உடல்களை கையாளுவது அதிர்ச்சியளிக்கிறது.
கொரோனா தொற்று அதிகரிப்புக்கு ஏற்ப நாளுக்கு நாள் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் மக்கள் கடுமையான ஊரடங்கை பின்பற்றினாலும் இன்னும் சிலர் உரடங்கில் பாதுகாப்பு உபகரணங்கள் கூட அணியாமல் சுற்றிவருவது மக்களின் அலட்சியத்தை காட்டுகிறது.







