கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நாளை நலத்திடங்களை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வானது நாளை தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது.
கொரோனாவால் பெற்றோரை இழந்த 1,400 குழந்தைகளுக்கு நாளை நலத்திடங்களை தமிழக முதல்மைச்சர் மு. க ஸ்டாலின் தலைமை செயலகத்தில் தொடங்கி வைக்க இருக்கிறார். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சம், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 3 லட்சம் வழங்கும் திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன.
இந்த நிகழ்வில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் சுமார் 1,400 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர் என்ற தகவல் தமிழக அரசுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.







