நேற்று நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கொரோனா தடுப்பூசி போடும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படம் நெட்டிசன்களால் பகிரப்பட்டு வைரலானது.
கொரோனா இரண்டாம் அலையின் நோய் தொற்று வேகமாக பரவி கொண்டிருக்கிறது, இந்நிலையில் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போடா வேண்டும் என்று அரசு தரப்பில் பல்வேறு விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றது.
இந்நிலையில் மக்கள் தற்போது தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். முன்களக பணியாளர்கள் , அரசியல் பிரமுகர்கள், திரைத்துறையினர் என்று பலரும் தற்போது தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றனர். இந்த வரிசையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனும் சேர்ந்துள்ளனர். நேற்று நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கொரோனா தடுப்பூசி போடும் புகைப்படத்தை, விக்னேஷ் சிவன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படம் நெட்டிசன்களால் பகிரப்பட்டு வைரலானது.

கடந்த வருடம் நயன்தாராவிற்கு கொரோனா தொற்று என்று வதந்திகள் கிளம்பிய போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா வீடியோ ஒன்றை வெளியிட்டனர். மேலும் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடியாக சென்று தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்த புகைப்படம் அனைவரின் கவனத்தயும் ஈர்த்துள்ளது.







