தமிழ்நாட்டில் நான்காவது நாளாக இன்றும் கொரோனா தொற்று ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 945 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,06,493 ஆக உயர்ந்துள்ளது. பல நாட்களுக்கு பிறகு கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நான்காவது நாளாக 1000க்கும் கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 15 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,191 ஆக அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து ஒரே நாளில் 1,047 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,59,407 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் தற்போது 10,895 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டங்களில், சென்னை மற்றும் கோவையில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 112 பேருக்கு தொற்றுப் பாதித்துள்ளது. 123 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். கோயமுத்தூரில் 107 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 119 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








