திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ம் தேதி தொடங்கியது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்னாமலை, உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை வரை மிக கனமழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,தேனி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக சென்னை, திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்றுஒரு நாள் விடுமுறை முறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.