ஜிஎஸ்டி கூட்டம் மற்றும் நிலுவைத்தொகை குறித்து ஆலோசிக்க டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்தார்.
இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று நிதித்துறைச் செயலாளர்களை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து இன்று காலை 10.40 மணியளவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவரது அலுவலகத்தில் வைத்து தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சந்திப்பின்போது, அடுத்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தை மதுரையில் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களுக்கான நிலுவைத்தொகை தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்த பின்னர், தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட பணிகளுக்கான கடன் பத்திரங்களைப் பெறுவதற்கு, மத்திய அமைச்சரவை விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டுமென மீண்டும் கோரிக்கை வைத்ததாகவும், இந்த மாத இறுதிக்குள் அதற்கு ஒப்புதல் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளதாகவும் கூறினார்.