சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
எடப்பாடி தொகுதியில் ஏழுவது முறையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார். அதற்காக இன்று அத்தொகுதியில் முதல்வர் வேட்புமனுவை அளித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் பேசியதாவது, எடப்பாடி தொகுதியில் தான் 1989ஆம் ஆண்டு முதல் போட்டியிட்டு வருவதாக தெரிவித்த அவர், அந்த தொகுதி மக்களுக்கு நன்மைகள் கிடைக்க பாடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக தேர்தல் அறிக்கை, அடித்தட்டு மக்களை கருத்தில் கொண்டே தயாரிக்கப்பட்டது என்றும் மேலும் மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.