1971-ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் போரில் பங்கேற்ற, சத்தீஸ்கரைச் சேர்ந்த 11 ராணுவ வீரர்களுக்கு தனியார் அமைப்பின் சார்பாக கவுரவிக்கப்பட்டனர்.
இந்தியா-பாகிஸ்தான் போரில் பங்கேற்ற சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தனியார் அமைப்பின் சார்பாக பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
1971-ல் இந்தியா-பாகிஸ்தான் போரில், இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் சைக்ளாதன் மற்றும் வாக்காத்தான் பேரணி நடைப்பெற்றது.
இதில், கலந்துகொண்ட முன்னாள் ராணுவ வீரர்கள், நயா ராய்ப்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அருகே, 25 கி.மீ சைக்கில் பேரணியில் கலந்துகொண்டனர்.
இந்த பேரணியை, ராய்ப்பூர் நகர வடக்கு எம்.எல்.ஏ குல்தீப் சிங் ஜுன்ஜாவால், கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து விழாவில் பங்கேற்ற் 11 வீரர்களுக்கக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.







