மணப்பாறையை அடுத்த சின்னமநாயக்கனூர் ஸ்ரீஎருதுகுட்டை சாமி கோயில் ஆடி மாத திருவிழாவின் முக்கிய நிகிழ்ச்சியான எருது ஓட்டம் என்னும் மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் காட்நாயக்கர்
சீல்நாயக்கர் மந்தையைச் சேர்ந்த சின்னமநாயக்கனூர் ஸ்ரீ எருதுகுட்டை சாமி ஆடி
மாத திருவிழா கரகம் பாலித்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியான எருது ஓட்டம், என்னும் மாலை தாண்டும் நிகழ்ச்சியானது ஆலய திடலில் நடைபெற்றது. இந்த எருது ஓட்டத்திற்காக, திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 14 மந்தைகளைச் சேர்ந்த ராஜகம்பளத்து நாயக்கர் இனமக்கள் சுமார் ஆயிரக்கணக்கானோர் தாங்கள் வளர்த்து வரும் எருதுகளுடன் வழிபாட்டு தளத்துக்கு வந்திருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிகழ்வில் அவர்கள் வளர்த்து வரும் எருதுகள் உறுமி மேளம், தாரைதப்பட்டை முழங்க ஆலயத்துக்கு அழைத்துவரப்பட்டு அங்கு மந்திரிக்கப்பட்ட புனித நீர் தெளிக்கப்பட்டது. அதன்பின் எருதுகள் சுமார் 2 கி.மீ மீட்டர் தொலைவிற்கு அழைத்துச்சென்று அங்கிருந்து வழிபாட்டு தளத்தை நோக்கி அனைத்து எருதுகளும் ஒரே நேரத்தில் அவிழ்த்துவிடப்பட்டன.
பின்னர் அவிழ்த்துவிடப்படுகிற எருதுகள் கொத்து கம்பு பூத்தாண்டும் பகுதி என எல்லை வரையறுக்கப்பட்ட பகுதியில் விரிக்கப்படிருக்கும் துண்டை முதலில் ஓடி வந்து தாண்டிச்சென்றன. எருது மேல், மஞ்சள் பொடி தூவி அவை முதலாவதாக வந்ததாக அடையாளம் காணப்பட்டது. முதலில் வந்த எருதுக்கு எலுமிச்சை கனியும், மஞ்சளும் கொடுத்து மரியாதை செய்யப்பட்டது. இதனையடுத்து போட்டியில் முதலாவது வந்த பசிபேர் நாயக்கர் மந்தை எருதுக்கு கனி பரிசாக அளிக்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ராஜகம்பளத்து நாயக்கர் இனமக்கள் கலந்துகொண்டனர்.
ரூபி.காமராஜ்