முக்கியச் செய்திகள் தமிழகம்

குழந்தை விற்பனை வழக்கு; ஜாமீன் மறுப்பு

மதுரையில் சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்த வழக்கில் காப்பகத்தின் நிறுவனர் சிவகுமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் இதயம் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் காப்பகம் அமைத்து செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்தின் நிறுவனர் சிவகுமார் மற்றும் நிர்வாகிகள் முதியோர்கள், ஆதரவற்ற குழந்தைகளை பராமரித்து வந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் கொரோனா தொற்று காலத்தில் போது இரண்டு குழந்தைகள் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறி வேறு நபர்களுக்கு குழந்தைகளை விலைக்கு விற்பனை செய்ததாக காப்பகத்தின் இயக்குனர் சிவகுமார், உதவியாளர் மதர்ஷா, ஒருங்கிணைப்பாளர் கலைவாணி உள்ளிட்ட 7 பேரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் காப்பகத்தின் நிறுவனர் சிவகுமார் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி குழந்தைகளை சட்டவிரோதமாக பிறருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும் இதில் ஆவணங்களும் முறைகேடாக தயார் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டி20 உலக கோப்பை; இலங்கை அணி அபார வெற்றி

G SaravanaKumar

தமிழக அமைச்சரவை கூட்டத் தேதி மாற்றம்

Web Editor

பெருமழை: வங்கதேசம் வழியாக கொல்கத்தாவுக்கு பேருந்து சேவை

Halley Karthik