பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் போன்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டுமென சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு புதுச்சேரி மாநில பட்ஜெட்டுக்கு இதுவரை அனுமதி வழங்காத நிலையில்,
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துணைநிலை ஆளுநர் உரையுடன்
தொடங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யாததை கண்டித்தும், மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றாதது, வேலைவாய்ப்பின்மை, மின்துறை தனியார் மயம், முதல்வரை செயல்படவிடாமல் துணைநிலை ஆளுநர் அரசியல் செய்வது மற்றும் மத்திய அரசு புதுச்சேரிக்கு போதிய நிதி ஒதுக்காகதது உள்ளிட்டவைகளை கண்டித்து, துணைநிலை ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், அனிபால் கென்னடி, சம்பத், செந்தில் குமார், நாக தியாகராஜன் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பந்த் உள்ளிட்டோர் பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.
பின்னர் துணைநிலை ஆளுநர் உரையை கண்டித்து சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா,
முழு பட்ஜெட் தாக்கல் செய்யாதது, மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றாதது,
புதுச்சேரிக்கு போதிய நிதி பெற்றுத் தராமல், மாநில வளர்ச்சி தடையாக அரசியல்
செய்துகொண்டிருக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
கண்டித்தும், அவர் உடனடியாக பதவி விலகக்கோரி வெளிநடப்பு செய்துள்ளாதாகவும்,
மேலும் கூட்டணியில் இருந்தபோதும் புதுச்சேரி மாநிலத்தை தொடர்ந்து புறக்கணித்து
வரும், பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பீகார் முதல்வர் நிதிஷ்குமார்
போன்று, கூட்டணியில் இருந்து விலகி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பதவி விலக
வேண்டுமென வலியுறுத்தினார்.