தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் கொரோனா தடுப்பூசி அளவு போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ளார். இதனால், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்வது மிகவும் கடினமாக உள்ளது எனவும்,மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டிற்கு குறைந்த அளவே தடுப்பூசி ஒதுக்கப்படுகிறது எனவும், கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு முறையே 1000 பேருக்கு 533, 493, 446 #CovidVaccine என்ற நிலையில் தமிழ்நாட்டில் 302 பேருக்குத்தான் ஒதுக்கீடு!
மாண்புமிகு @PMOIndia உடனடியாக தலையிட்டு மற்ற மாநிலங்களுக்கு இணையாக 1 கோடி தடுப்பூசிகளை தமிழ்நாட்டிற்கு அளித்திட வேண்டும். pic.twitter.com/ZL4KKqej6V
— M.K.Stalin (@mkstalin) July 13, 2021
மேலும், தமிழ்நாட்டிற்கு மக்கள் தொகை அடிப்படையில் சரியான அளவில் தடுப்பூசிகள் ஒதுக்கவேண்டும் எனவும், தமிழ்நாட்டிற்கு தற்போது ஒதுக்கப்படும் தடுப்பூசி அளவு ஆயிரம் நபர்களுக்கு 302 என்ற விகிதத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு கோடி தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக அளித்திட வேண்டும் எனவும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.